06th May 2020 17:30:35 Hours
64 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் ஜே.எம்.என்.கே ஜயசுந்தர அவர்களினால் தனியார் நன்கொடையாளின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு சீருடைகளானது, முல்லைத்தீவு பிரதேசத்தில் உள்ள மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனிமைப்படுத்தல் மையங்களில் சேவைபுரியும் படையினர் மத்தியில் விணியோகிப்பதற்காக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயத்திலக்க அவர்களிடம் குறித்த 30 பிரத்தியேக பாதுகாப்பு சீருடைகளானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை 5 ஆம் திகதி வழங்கப்பட்டன.மேலும் குறித்த சீருடைகளானது கோவிட்-19 தொற்று நோய்க்கெதிராக தனிமைப்படுத்தல் மையங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவத்தினருக்கு வழங்கப்படவுள்ளன. Nike Sneakers | Air Jordan