Header

Sri Lanka Army

Defender of the Nation

06th May 2020 18:34:35 Hours

முல்லைத்தீவு படையினரால் நாயாறுவில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்புடன் தனியார் நன் கொடையாளரினால் வழங்கப்பட்ட 150 உலர் உணவுப் பொதிகளானது வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு விணியோகிக்கப்பட்டன.

குருநாகல் பிரதேசத்தில் உள்ள பிரபல்யமான வர்தகர் திரு சுரேஷ் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்க அவர்களை தொடர்பு கொண்டு ,தற்பொழுது காணப்படும் தொற்று நோய் மற்றும் ஊரடங்குச் சட்டம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாயாறு பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தனது அனுசரணையினை வழங்கினார்.

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களுடன் 59 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா, 593 ஆவது பிரிகேட் தலைமையக கட்டளைத் தளபதி கேணல் வசந்த பலகும்பர, 19 ஆவது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி , அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் உட்பட பலர் இவ்விணியோகத்தில் கலந்து கொண்டனர். url clone | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK