04th May 2020 19:43:50 Hours
தனிமைப்படுத்தும் மையங்களில் சேவையாற்றும் படையினர்களின் உளவியல் நலன் மற்றும் மனநிலையை மேம்படுத்தும் நிமித்தம், உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தினால் பல ஊக்குவிப்பு திட்டங்களானது, பனாகொட, வத்தளை, கட்டுனாயக்க மற்றும், கடுவல ஆகிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பனாகொட போதிரஜராமயாவில் திருமதி அனோஜா வீரசிங்க அவர்காளால் யோகா நிகழ்வும், வத்தளை மற்றும் கட்டுநாயக்கவில் உள்ள இளைஞர் படையணி ரோலக்ஸ் கட்டிடத்தில் கேணல் டொக்டர் ஆர்.எம்.எம் மோனராகல அவர்களினால் மனநல விழிப்புணர்வு அமர்வுகள், கடுவலயில் உள்ள பியகமவில் ஹோட்டலில் மதகுரு ஹசித்த ஹெட்டிஆராச்சி அவர்களினால் ஆத்மீக திருப்தி தொடர்பான அமர்வுகள் . இலங்கை இராணுவ மகளிர் படைப்பிரிவு ரெஜிமென்டல் நிலையத்தில் லெப்டினன் கேணல் பி.ஜி.எஸ் சமந்தி அவர்களின் நேர் எண்ணங்கள் தொடர்பான அமர்வுகளானது 1 ஆவது கட்டமாக குறித்த இடங்களில் தனித்தனியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இந்த திட்டத்தின் முதல் கட்டமாக, தனிமைப்படுத்தல் நிலையங்களில் சேவைபுரிபவர்களின் சிறந்த நலனுக்காக திட்டமிடப்பட்டுள்ளது. Nike footwear | Jordan Ανδρικά • Summer SALE έως -50%