04th May 2020 19:44:30 Hours
இராணுவ தளபதி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட ‘துரு மித்துரு – நவ ரடக்’ எனும் திட்டத்திற்கமைய 66 ஆவது காலாட் படைப் பிரிவின் படைத் தளபதி மற்றும் 661 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோரின் வழிக்காட்டலின் கீழ் 66 ஆவது காலாட் படைப் பிரிவு மற்றும் 661 ஆவது படைப் பிரிவு படையினரால் பயிரிடப்பட்ட 12 ஏக்கர் நெற்பயிர்ச் செய்கை, வற்றாளைக் கிழங்குகள், பச்சை மிளகாய்,போஞ்சி,சோளம்,கத்தரிக்காய், தர்பூசணி மற்றும் வாழைபழம் ஆகியன பெரிதும் வெற்றியளித்துள்ளன.
அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகளை விற்பனை செய்ய முன்னர், படையினர் மரக்கறிகள் மற்றும் பழங்களை உள்ளடக்கிய 100 இற்கும் அதிகமான பொதிகளை கோவிட்-19 தொடர்பாக தடைவிதிக்கப்பட்ட பிரதேசம் மற்றும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்ட பிரதேசத்தில் உள்ள வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
அறுவடை செய்யப்பட்ட மரக்கறிகளானது பூனேரின் மக்களுக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் மற்றும் சிவில் இராணுவ உறவுகளை மேம்படுத்தும் முகமாகவும் அப்பிதேச மக்களுக்கு நியாயமான விலையில் விற்பனை செய்யப்படவுள்ளன. Sport media | Nike Running