Header

Sri Lanka Army

Defender of the Nation

04th May 2020 19:41:57 Hours

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களது வீடுகளுக்கு செல்லல்

இராணுவத்தினரால் நிருவகிக்கப்பட்டு வரும் மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரி தனிமைப்படுத்தல் மையம் மற்றும் கடற்படையினரால் நிருவகிக்கப்பட்டு வரும் பூசா தனிமைப்படுத்தல் மையம் ஆகிய மையங்களில் மூன்று வார காலத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 129 நபர்கள், மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் இன்று காலை 4 ஆம் திகதி தங்களுடைய வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

பேருவலை ,மருதானை மற்றும் மாலிகாவத்தை பிரதேசங்களைச் சேர்ந்த குறித்த நபர்களுக்கு, இராணுவத்தினரால் உணவுகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டன. மேலும் தனிமைப்படுத்தல் மையங்களின் கட்டளை அதிகாரிகள் அவர்களை வழியனுப்பிவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sports | Nike Shoes