23rd April 2020 10:49:11 Hours
அநுராதபுர கல்குளத்தில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியின் ஏற்பாட்டில் இப்படையணியைச் சேர்ந்த 85 இராணுவ அங்கத்தவர்கள் அநுராதபுரத்திலுள்ள போதனா வைத்தியசாலையில் இம் மாதம் 21 ஆம் திகதி இரத்த தானங்களை வழங்கி வைத்தனர்.
இந்த பணிகள் வடமத்திய மாகாண முன்னரங்க பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எல்.பி பிரேமலாள் அவர்களது வழிக்காட்டலின் கீழ் பொலிஸ் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் எம்.எம்.எம்.பி மகேஷ் குமார அவர்களது தலைமையில் இடம்பெற்றன. buy shoes | jordan Release Dates