19th April 2020 23:31:43 Hours
தியதலாவையிலுள்ள கோவிட் – 19 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் பணி புரியும் இராணுவத்தினர் மற்றும் சிவில் மருத்துவ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று நோய் தொடர்பாக ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விரிவுரைகள் இம் மாதம் (18) ஆம் திகதி தியதலாவையிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இடம்பெற்றன.
தியதலைவையிலுள்ள இராணுவ மருத்துவ அதிகாரிகளுக்கு மருத்துவ முகாமைத்துவம், தனிப்பட்ட பாதுகாப்பு உலகலாவிய மற்றும் நாட்டின் போக்குகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்ற தொடர்புடைய விடயங்களை உள்ளடக்கி இந்த விரிவுரைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த விரிவுரை நிகழ்வில் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா, தியதலாவை மற்றும் பண்டாரவளை பிரதேச செயலாளர்கள், தியதலாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இராணுவ வைத்திய அதிகாரிகள் இணைந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sneakers | Nike Shoes