19th April 2020 23:37:46 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் முயற்சியில் அன்மையில் இடம்பெற்ற சந்திப்பின் விளைவாக, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர், பெரியளவிலான மரக்கறிகள் மற்றும் பழவகைகள் ஆகியவற்றை கொழும்பில் உள்ள தென் பகுதிகள் மற்றும் கழுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு எடுத்து செல்வதற்கு சனிக்கிழமை 18 ஆம் திகதி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தனர்.
மாவட்ட செயலகத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஆரம்ப கட்ட ஏற்பாட்டில் அரச அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்க ஆகியோர் கலந்து கொண்டனர். buy shoes | Sneakers Nike Shoes