Header

Sri Lanka Army

Defender of the Nation

17th April 2020 22:10:05 Hours

23 ஆவது கஜபா படையினரால் ஹம்மாந்தோட்டை வைத்தியசாலைக்கு இரத்த தானம்

கோவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இவ்வேளை, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 12 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகத்தின் யாலவில் அமைந்துள்ள 23 ஆவது கஜபா படையணின் படையினரால் வியாழக்கிழமை 16 ஆம் திகதி ஹம்மாந்தோட்டை வைத்தியசாலைக்கு இரத்த தானம் செய்தனர்.

இந்த ஏற்பாடானது ஏதாவது அவசர நிலைமையின் நிமித்தம் இரத்தம் தேவைப்படுமாயின் அதனை நிபர்த்தி செய்யும் முகமாக ஒழுங்கு செய்யப்பட்டது.நோயாளிகளின் தேவை கருதி, இராணுவ அதிகாரிகள் உட்பட 40 அதிகமான இராணுவத்தினர் இவ்விரத்த அன்பளிப்பை செய்தனர்.

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அறிவுறுத்தலின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது சுற்று இரத்தான நிகழ்வானது ஏப்ரல் 21 ஆம் திகதி கதிர்காமத்தில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 3ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் நடாத்தப்படும். Sports brands | THE SNEAKER BULLETIN