17th April 2020 22:00:05 Hours
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு இணைப்பு அதிகாரி குழு கெப்டன் சீன் அன்வின் அவர்கள் பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை, இராணுவத் தலைமையகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை 17 ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடினார்.
அங்கு நடைபெற்ற நல்லுறவு கலந்துரையாடலின் போது, சுகாதார அதிகாரிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் ஒருங்கிணைந்து கோவிட்-19 தொற்று நோயினை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை ஆயுதப்படைகள் எவ்வாறு சிறப்பாக செயல்படுகின்றன என்பது குறித்து வருகை தூதுவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஏற்கனவே பல உயிர்களை காவுகொண்ட இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு உலகளாவியரீதியிலான ஒத்துழைப்பின் அவசியத்தை பற்றியும் அவர் சுட்டிக் காட்டினார்.jordan release date | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet