17th April 2020 22:15:39 Hours
அர்பணிப்புள்ள சிரேஷ்ட அதிகாரிகளில் ஒவாரான கெமுனு ஹேவா படையணியினைச் சேர்ந்த யக்கல ரணவிரு எப்பரல்ஸ் நிறுவனத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஞ்சுல மனதுங்க அவர்கள் தான் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்வதனை முன்னிட்டு பாதுகாப்பு தலைமைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை வௌளிக்கிழமை 17 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தனது வேளைப்பழு பாராது, அவரை வரவழைத்து அவர்களுடன் கலந்துரைலயாடியதோடு, அவரின் திறமையான அர்ப்பணிப்பிற்காக, அதிலும் விஷேடமாக, நூற்றுக்கணக்கான அங்கவீனமுற்ற படை வீரர்கள் சேவைபுரியும் ஆடை உற்பத்தி தொழிற்சாலையான ரணவிரு எப்பரஸ்ஸில் மேற்கொண்ட தனது திறமையான சேவைக்காக பாராட்டினார்.
விடைபெற்றுச் செல்லும் சிரேஷ்ட அதிகாரியவர்கள் இராணுவத் தளபதியின் வாழ்த்துக்கள் மற்றும் அவரின் எண்ணங்களுக்காக தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார். கலந்துரையாடலின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள், சிரேஷ்ட அதிகாரியின் எதிர்கால செயற்பாடுகளுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்த்துடன் அவருக்கு ஞாபகச் சின்னத்தினையும் வழங்கி வைத்தார்.Sneakers Store | Ανδρικά Nike