17th April 2020 14:29:43 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 62 ஆவது பாதுகாப்பு படைப பிரிவின் கீழ் உள்ள அனைத்து பாதுகாப்பு படையின் கட்டளை பிரிவினை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 120 இற்கும் மேலான படையினர் செவ்வாய்க்கிழமை 7 ஆம் திகதி அனைத்து வன்னி வைத்தியசாலைகளில் நோயாளிகளின் ஏதாவது அவசர தேவை கருதி தற்போதுள்ள இரத்த வங்கிகளின் இருப்பை நிரப்புவதற்காக, தங்கள் இரத்தத்தை தானாக முன்வந்து நன்கொடையாக அளித்தனர்.
62 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக்க ஜயசிங்க அவர்களின் முயற்சியில் இந்த திட்டமானது, கல்குளமில் தொடங்கப்பட்டது.
அநுராதபுரம் பொது வைத்தியசாலை மற்றும் பதவிய தளவைத்திய சாலைகளின் மருத்து குழுவினர் இணைந்து இந்த இரத்த சேகரிப்பினை அன்பளிப்பாளர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.
கொரோனா தொற்றுநோய்களின் போது ஏதேனும் தற்செயல்கள் ஏற்பட்டால், பல்வேறு வகையான இரத்த வகைகள், பிளேட்லெட்டுகள் மற்றும் புதிய பிளாஸ்மா போன்றவற்றிற்கான சரியான நேரத்தில் தேவையை கருத்தில் கொண்டு இது ஏற்பாடு செய்யப்பட்டது. 62 ஆவது பாதுகாப்புப் படைப் பிரிவுத் தலைமையகத்தின் இராணுவ மருத்துவ குழுவினர் வைத்தியசாலை மருத்துவ அதிகாரிகளுக்கு தங்களது ஒத்துழைப்பினை இந்த இரத்த தான நிகழ்விற்கு வழங்கினர். Running sport media | Men’s shoes