15th April 2020 17:00:44 Hours
தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மன நிம்மதியை அளிக்கும் நோக்கமாக, இராணுவ இசை குழுவினர்,செவ்வாய்க்கழமை 14 ஆம் திகதி கொம்பனி தெருவில் அமைந்துள்ள 320 பேர் வசிக்கும் புதிய மாடிக் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகில் இன்னிசை பாடல் நிகழ்வினை நடத்தினர்.
கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமன லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ் இராணுவ இசை குழுவினர் தங்களின் பிரபலமான திறமைகளை மக்களின் ஆதரவிற்கு மத்தியில் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த முக்கியமான நேரத்தில் அவர்களை மகிழ்விப்பதற்காக அங்கு இருந்த கலைஞர்களை நோக்கி நோக்கி பொதுமக்கள் தங்கள் பல்கனிகளில் இருந்து கைகளை அசைத்து கைதட்டினர்.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் எண்ணக்கருவின் கீழ் இன்னிசை நிகழ்வுகளானது முப்படையினர் மற்றும் பொலிசாரினால் நடாத்தப்பட்டு வருகின்றன. affiliate tracking url | nike air max 95 obsidian university blue book list