15th April 2020 21:26:05 Hours
சிலோன் தேவாலயத்தின் கொழும்பு மறைமாவட்ட ஆயர் திரு ரெவ் திலோராஜ் ரஞ்ஜித் கனகசபே அவர்கள் இன்று காலை 15 ஆம் திகதி பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது இருவரும் கோவிட்-19 தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு முறைகள் , ஆயுதப் படைகளின் வகிபாகம் மற்றும் பொது மக்களுக்கான அவர்களின் சேவை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இக் கலந்துரையாடலின் இறுதியில் லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் விஜயத்தினை மேற்கொண்ட திரு ரெவ் ரஞ்ஜித் கனகசபே அவர்களுக்கு நினைவுச் சின்னத்தினை வழங்கினார். இச்சந்திப்பில் அவருடன் இரண்டு பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.Nike sneakers | NIKE RUNNING SALE