Header

Sri Lanka Army

Defender of the Nation

15th April 2020 22:00:44 Hours

கோவிட்-19 கட்டுப்பாட்டு திட்டத்திற்கு அமைச்சரினால் புதிய ட்ரோன் இராணுவத்திற்கு நன்கெடையாக வழங்கி வைப்பு

கெளரவ அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள் புதன்கிழமை 15 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, பாதுகாப்புத் தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களிடம் இராணுவத்தின் தற்போதைய கோவிட்-19 வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்றகாக புதிய ட்ரோனை நன்கெடையாக வழங்கினார்.

நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த ட்ரோனைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் ஒரு கண்காணிப்புப் பிரிவை நிறுவ இராணுவத் தளபதி எதிர்பார்த்துள்ளார்.மேலும் அவர் அதன் முக்கியத்துவத்தை பற்றி குறிப்பிட்டார், குறிப்பாக கோவிட்-19 வைரஸினால் பாதிக்கப்பட்ட கிராமங்களைத் கண்காணித்து தடுப்பதில் இந்த உபகரணங்களை சரியான நேரத்தில் நன்கொடையாக வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

அமைச்சர் வீரவன்ச அவர்கள் விதிவிலக்கான இராணுவத்தின் அர்பணிப்பிற்காக தனது பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, எதிர்காலத்திலும் இராணுவத்திற்கு தனது ஒத்துழைப்பினை வழங்குவதாக உறுதியளித்தார்.Nike Sneakers Store | Nike