09th April 2020 23:09:50 Hours
தற்போதுள்ள கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே தனிமைப்டுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மன நிதானத்தை அளிக்கும் நோக்கமாக, இராணுவ இசை குழுவினர், புதன்கிழமை (8)ஆம் திகதி மொரட்டுவை,சொய்சாபுர மற்றும் நாரஹேன்பிட்டயிலுள்ள இராணுவ வதிவிட விடுதி ஆகிய பிரதேசங்களில் நடமாடும் இன்னிசை பாடல் நிகழ்வினை நடத்தினர்.
கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமன லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ் இராணுவ இசை குழுவினர் தங்களின் பிரபலமான திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்த முக்கியமான நேரத்தில் அவர்களை மகிழ்விப்பதற்காக அங்கு இருந்த கலைஞர்களை நோக்கி நோக்கி பொதுமக்கள் தங்கள் பல்கனிகளில் இருந்து கைகளை அசைத்து கைதட்டினர்.
அதிமேதகு ஜனாதிபதி மற்றும் கௌரவ பிரதமர் ஆகியோரின் எண்ணக்கருவின் கீழ் இன்னிசை நிகழ்வுகளானது முப்படையினர் மற்றும் பொலிசாரினால் நடாத்தப்பட்டு வருகின்றன.
அதேவேளை, இராணுவ இசை குழுவினரினால் இன்னுமொரு பாடல் நிகழ்வானது,பெயமௌன்ட் ஏபன்ட் ஒயாசிஸ் குடியிருப்பு கட்டிடத்திற்கருகில் வியாழக்கிழமை 9 ஆம் திகதி தங்களின் பிரபலமான திறமைகளை வெளிப்படுத்தி மக்களை மகிழ்வித்தனர்.கோவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்காக தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமன லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களின் கீழ், இந்த முக்கியமான நேரத்தில் அங்கு இருந்த பொது மக்களை மகிழ்விப்பதற்காக வருகை தந்த பாடகர்களான பத்திய, மற்றும் சந்தோஷ் ஆகியோர் இராணுவக் குழுவில் சேர்ந்து தங்களின் பிரபலமான திறமைகளை வெளிப்படுத்தினர். அங்கு இருந்த கலைஞர்களை நோக்கி நோக்கி பொதுமக்கள் தங்கள் பல்கனிகளில் இருந்து கைகளை அசைத்து கைதட்டினர். Asics footwear | Nike