Header

Sri Lanka Army

Defender of the Nation

10th April 2020 19:56:45 Hours

நிவாரணக் கொடுப்பனவுகளை வழங்க அரச அதிகாரிகளுக்கு யாழ் இராணுவம் ஒத்துழைப்பு

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் படையினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் யாழ் மாவட்டத்திலுள்ள கஷ்டப்படும் மக்களுக்கு அன்னளவாக ரூபா 1.5 லட்சத்தினை வழங்க தங்களது ஒத்து பைபினை வழங்கினர்.

கோவிட்-19 வைரஸினை கட்டுப்படுத்தும் முகமாக நாட்டில் விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகள், சிறுநீரக நோயாளிகள், அங்கவீன மற்றும் வயது முதிந்தவர்கள் மற்றும் ஏனைய தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் போன்றோரிற்கு இடையில் குறித்த அரச கொடுப்பனவை பகிர்ந்தளிப்பதற்காக, அவர்கள் யாழ் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அரச அதிகாரிகளுக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கினர்.

அரச அதிகாரிகளின் ஆலோசனைக்கமைவாக, அரச நிவாரண திட்டத்தின் கீழ் ஒவ்வொருவருக்கும் ரூபா 5000 வீதம் வழங்கப்பட்டது. படையினர் அரச அதிகாரிகளுடன் பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று குறித்த அரச கொடுப்பனவினை வழங்கள ஒத்துழைத்தனர். யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்கள் இத்திட்டத்திற்கான அதிக பட்ச ஒத்துழைப்பினை வழங்குமாறு அனைத்து படைப் பிரிவுத் தலைமையகம் மற்றும் பிரிகேட் தலைமையகங்களுக்கு அறிவுறுத்தல்களை விடுத்தார்.Sports News | Sneakers