12th April 2020 23:05:06 Hours
சந்திலிபே &தெல்லிப்பள்ளி பிரதேசத்தை ஏழை மக்களின் கஷ்ட நிலைகளை உணர்ந்த 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் இயங்கும் 515 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர் தங்களது சொந்த நிதியின் மூலம் 30 இற்கும் அதிகமான உலர் உணவுப் பொதிகளை சனிக்கிழமை 11 ஆம் திகதி வழங்கினர்.
பிரதேசத்தில் விதிக்கப்பட்ட ஊரங்குச் சட்டம் காரணமாக, தொழில் கிடைப்பது கடினமாக இருந்தமையினால் , அவர்கள் சமுர்த்தி மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிவாரணப் பொருட்களில் பெரிதும் தங்கியிருந்தனர்.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய, 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையகம் மற்றும் 515 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகம் ஆகியவற்றின் தளபதிகள் இந்த திட்டத்திற்கான தங்களது ஆதரவை வழங்கினர்.jordan Sneakers | Nike sneakers