12th April 2020 23:48:59 Hours
பாதுகாப்பு தலைமை பிரதானி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தீபகற்பத்தில் தங்கியிருந்த போது ஞாயிற்றுக்கிழமை 12 ஆம் திகதி பாலாலி விமானப்படை தளத்தில் உள்ள அனைத்து விமானப் படையினரையும் சந்தித்து அவர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவ்விடத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு தலைமை பிரதானியவர்களை குழு கெப்டன் அசல ஜயசேகர மற்றும் விமானப் படை சிரேஷ்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
அவர்கள் மத்தியில் உரையாற்றிய பாதுகாப்பு தலைமை பிரதானி அவர்கள் அவர்களின் அர்பணிப்பிற்கு பாராட்டினை தெரிவித்த்துடன் அவர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
விமானப்படையினருக்கு அவர் ஆற்றிய உரையின் போது அவர் பின்வருமாறு கூறினார்: “எங்கள் வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் செய்த அர்ப்பணிப்பு மற்றும் விலைமதிப்பற்ற சேவைகள், ஜனாதிபதி, கௌரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அனைத்து இலங்கையர்களிடமிருந்தும் பெரிதும் போற்றப்படுகின்றன, "முழு உலகமும் இந்த தொற்று நோயினால் அச்சுறுத்தலுக்கு உள்ளான போது எங்கள் வரலாற்றின் இந்த முக்கியமான கட்டத்தில் நீங்கள் அர்ப்பணித்த மற்றும் விலைமதிப்பற்ற சேவைகளானது ஜனாதிபதி, கௌரவ பிரதமர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அனைத்து இலங்கையர்களினாலும் பெரிதும் போற்றப்படுகிறன. எங்கள் மீது நம்பிக்கை வைத்து, முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி, என்னை கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமித்து, இந்த சவாலான பணியை தேசத்தின் இருப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளான போதெல்லாம் அதைப் பாதுகாத்த இலங்கை இராணுவம் ,கடற்படை மற்றும் விமானப படையினரிடம் ஒப்படைத்தார் .இப்போது நம் வாழ்க்கை மாறிவிட்டாலும், இந்த புத்தாண்டு பருவத்தில் நம்முடைய நெருங்கிய மற்றும் அன்பானவர்களுடன் நாம் ஒன்றுகூட முடியாது என்றாலும், நாம் நன்றாக நடந்துகொள்வதன் மூலமும் மற்ற அனைவரையும் ஆரோக்கியமாக இருக்க அனுமதிப்பதன் மூலம் நாம் நிச்சயமாக நாட்டின் பெருமைமிக்க குடிமகனாக இருக்க முடியும். நாட்டின் நலன்பேண, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பது அவசியம், எனவே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின்படி உங்கள் அனைவருக்கும் கோவிட்-19 பரவுவதற்கு எதிராக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம், ”என்று குறிப்பிட்டார்.
லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் கூறுகையில், நாட்டில் மிகக் குறுகிய காலத்திற்குள் ஆயுதப்படைகள் எவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை நிறுவின என்பதை நினைவூட்டுவதன் மூலம் இந்த முக்கியமான நேரத்தில் விமானப் படையினர் மேற்கொண்ட கடின உழைப்பை பாராட்டுகிறேன். . "எங்கள் இரண்டாவது பணி பாதிக்கப்பட்ட நோயாளிகளையும் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களையும் தேடுவது. இப்பணியை நிறைவேற்ற இராணுவத்தினருக்கு கைகோர்த்த விமானப் படையினரின் அர்ப்பணிப்பை அங்கு நான் மிகவும் பாராட்ட வேண்டும். அடுத்து, அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் இற்றை வரைக்கும் உள்ளது. இப்போது வரை, முப்படைகளான நாங்கள் ஒரு தேசமாக எங்கள் பங்கைச் செய்துள்ளோம். அதற்கு மேலதிகமாக , இந்த நடவடிக்கையின் தொடக்கத்திலிருந்து சுகாதார அதிகாரிகளும் பொலிசாரும் எங்களுக்கு ஒத்துழைத்தமைக்கும் நன்றி தெரிவிக்கிறேன், ”என அவர் குறிப்பிட்டார்.
விமானப் படைத் தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஷ் அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு எங்கள் பணிகளை எளிதாக்கியது என்றும் அவர் எப்போதுமே இராணுவத்தின் பக்கம் நின்றார் என்றும் பாதுகாப்பு தலைமை பிரதானி மேலும் கூறினார். விமானப படையினர் கிருமிநாசினி அறைகளை மேம்படுத்தி, இந்த தேசிய பணிக்கும், இந்த கொடிய தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கும் தங்களின் அதிகபட்ச ஆதரவை வழங்கியுள்ளனர். “மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கையின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது. இதற்காக, தேசத்தை காப்பாற்ற ஜனாதிபதி,கௌரவ பிரதமர், பாதுகாப்புசெயலாளர் , முப்படையினர், சுகாதார அமைச்சு, அரசு மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து தங்கள் பங்களிப்பினை வழங்கிகின்றன.எனவே அவர்கள் அனைவருக்கும் எங்கள் நாடு சார்பாக நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கோவிட் - 19 இன் ஐந்தாவது வாரத்தை நாங்கள் கடந்து செல்கிறோம். கோவிட் – 19 தொற்று அதிகரிப்பு சதவீதத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்., ”என்று அவர் மேலும் கூறினார்.Sportswear Design | Nike Shoes