11th April 2020 17:04:04 Hours
உடயார்கட்டு மக்களின் கஷ்ட்ட நிலைமைகளை கருத்திற் கொண்டு, 7 ஆவது கெமுனு ஹேவா மற்றும் 9 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினர், முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் டீப்தி ஜயதிலக்க அவர்களினால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், அத்தியாவசிய நடமாடும் விற்பனை திட்டத்தினை புதன்கிழமை 8 ஆம் திகதி ஆரம்பித்தனர்.
இத்திட்டமானது, 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.பி.ஜே ரத்நாயக்க அவர்களின் மேற்பார்வையின் கீழ், 683 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி கேணல் டி.ஆர்.என் ஹெட்டிஆராச்சி அவர்களின் திறமையான ஒருங்கிணைப்புடன் ஆரமபிக்கப்பட்டது.
நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரங்கு சட்டம் காரணமாக பொதுமக்கள் நடமாடுவது தடை செய்யப்பட்டுள்ளமையினால், படையினர் உலர் உணவு,மரக்கறிகள் மற்றும் மசாலா உள்ளிட்ட நிவாரணப் பொதிகளை மானிய விலையில் 683 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்தில் வினியோகித்தனர். அரச அதிகாரிகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களின் பூரண ஒருங்கிணைப்போடு ஆரம்பிக்கப்பட்ட வீடு வீடான இந்ந நடமாடும் திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்பட்டது.latest Running Sneakers | GOLF NIKE SHOES