Header

Sri Lanka Army

Defender of the Nation

28th March 2020 20:20:04 Hours

வரிய குடும்பத்தினரிற்கான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் மற்றும் 65ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் மேற்பார்வை மற்றும் 651, 652 மற்றும் 653 படைத் தலைமைகைங்களின் படையினர் 47 உலர் உணவுப் பொதிகளை கடுமையாக பாதிக்கப்பட்ட வரிய குடும்பங்களுக்கு 65ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு பிரதேசங்களில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (22) ஆம் திகதி விநியோகித்தனர்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்ட நேரங்கள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேற இயலாமை ஆகியவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை கருத்திற்கொண்டு படையினரால் இச் சமூகத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

65 ஆவது பாதுகாப்பு படைத் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்கள் 651, 652 மற்றும் 653 ஆவது பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதிகளுடன் இணைந்து இந்த திட்டத்தை மேற்பார்வையிட்டார். 10 ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை, 19ஆவது இலங்கை இலேசாயுத காலாட்படை, 17 ஆவது (தொண்) இலங்கை இலேசாயுத காலாட்படை, 20ஆவது (தொண்) விஜயபாகு காலாட்படை படை மற்றும் 7ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் படையினர் இப்பொதிகளின் விநியோக பணிகளில் ஈடுபட்டனர்.Sports Shoes | Patike – Nike Air Jordan, Premium, Retro Klasici, Sneakers , Iicf