27th March 2020 21:30:14 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் சேவைபுரியும் படையினரின் ஒத்துழைப்புடன் ஒவ்வொன்றும் 2 கி.கி நிறையுடைய 2904 மா பக்கட்டுகளானது, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வரிய குடும்பங்களுக்கு புதன் கிழமை 25 ஆம் திகதி வழங்கப்பட்டன. இதற்கு மாவட்ட/பிரதேச செயலகங்கள் மற்றும் பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர்களினால் ஒத்துழைப்பு வழங்கப்பட்டன.
ஊரங்குச் சட்ட அமுலினால் வரிய மக்கள் பெரிதும் இன்னலில் இருக்கலாம் என்பதனை கருத்திற்கொண்டு இந்த திட்டமானது ஏற்பாடு செய்யப்பட்டது. பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது.affiliate tracking url | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify