25th March 2020 18:19:14 Hours
கண்டக்காடு தனிமைப்படுத்தல் நிலையங்களில் இரண்டு வார காலம் தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் மருத்துவ பரிசோதனைகளை நிறைவு செய்த 144 பேர் கொண்ட இராண்டாவது குழுவினர் தனிமைப்படுத்தலுக்கான சான்றிதல்களுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களை விட்டு தமது வீடுகளுக்கு இன்று காலை 25 ஆம் திகதி புறப்பட்டுச் சென்றனர். இவர்களுக்கான இராணுவ பேருந்துகள் மற்றும் பொதிகளை கொண்டு செல்வதற்கான இராணுவ லொரிகள் போன்ற போக்குவரத்து வசதிகளானது வழங்கப்பட்டது.
காலி,கொழும்பு,கண்டி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களை நோக்கி புறப்பட்ட குறித்த குழுவினருக்கு படையினரால் சிற்றுண்டி உணவுகள், குடி நீர் மற்றும் மதிய உணவுப் பொதிகள் விஷேடமாக பெற்றோர்களுடன் பிரயானம் செய்யும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை கருத்திற்கொண்டு வழங்கப்பட்டுள்ளன.Running Sneakers Store | 『アディダス』に分類された記事一覧