10th March 2020 08:25:08 Hours
ஆவது படைப் பிரிவு தலைமையகத்தின் கீழ் இயங்கும் படையினருக்கு ‘போதைப்பொருள் பாவனை மற்றும் போதை ஒழிப்பு ’தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மட்டகுளியவில் அமைந்துள்ள 6 ஆவது கெமுனு ஹேவா படையணியில் வைத்து கடந்த 10 ஆம் திகதி செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இந்த விரிவுரையானது மட்டக்குளியின் தலைமை பொலிஸ் அத்தியட்சகர்; லலித் ஜெயசேகர அவர்களால் வழங்கப்பட்டதுடன், இதில் 08 அதிகாரிகள் மற்றும் 135 படையினர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விரிவுரையில் அவர் போதைப்பொருள் பாவனை, போதைப் பொருட்களைத் தடுப்பது, போதைப்பொருள் பாவனையின் பின் விளைவுகள் மற்றும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் போதைப்பொருட்களைக் கண்டறிதல் தொடர்பாக விளக்கமளித்தார். latest jordan Sneakers | UK Trainer News & Releases