15th March 2020 18:50:40 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு புதிதாய் நியமிக்கப்பட்ட படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்கள் இந்த தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59, 64 மற்றும் 68 ஆவது படைப் பிரிவு தலைமையகங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த படைப் பிரிவுகளுக்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதி அவர்களுக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டார். பின்பு படைப் பிரிவு தலைமையகங்களின் கடமை நிர்வாக பொறுப்புக்கள் தொடர்பாக கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளும் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் படைத் தளபதி அவர்களினால் படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். இதன் போது 59, 64, 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதிகள், கட்டளை தளபதிகள், கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். affiliate tracking url | Trending