Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2020 20:10:40 Hours

இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் இம் மாதம் (12) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாய் பதவியேற்ற படைத் தளபதியவர்கள் பனாகொடையிலுள்ள தலைமையகத்திற்கு வருகை தந்த போது இவரை இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார். அத்துடன் இலேசாயுத காலாட் படையணிக்குரிய கன்டுல யானையானது புதிய படைத் தளபதி அவர்களை ஆசிர்வாதித்தது மரியாதைகளை வழங்கி வைத்தது.

பின்னர் தலைமையகத்திலுள்ள படைத் தளபதியின் பணிமனைக்கு வருகை தந்த படைத் தளபதி அவர்கள் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு ஆவணங்களில் கையொப்பமிட்டு தனது பதவியை உத்தியோகபூர்வமாக பாரமேற்றுக் கொண்டார்.

அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் புதிய படைத் தளபதி அவர்களினால் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு பின்னர் இராணுவ நினைவு தூபிகளுக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைத்து அஞ்சலியை செலுத்தி தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியாகவும் பதவி வகிக்கின்றார். இவர் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுச் சென்றதன் நிமித்தம் இவர் இலேசாயுத காலாட் படையணியின் புதிய கட்டளை தளபதியாக நியமிக்கப்பட்டார். latest Running Sneakers | adidas Yeezy Boost 350