14th March 2020 10:06:44 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும், வடமத்திய பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர் பிரேமலாள் அவர்கள் கிளிநொச்சியிலுள்ள 5 ஆவது இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் (13) ஆம் திகதி மேற்கொண்டார்.
படையணி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதி அவர்களுக்கு படையணி தலைமையகத்திலுள்ள படையினர் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகளை வழங்கி வைத்து கௌரவித்து வரவேற்றனர்.
பின்னர் படைத் தளபதி அவர்களினால் படையணி தலைமையகத்தினுள் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | M2k Tekno