Header

Sri Lanka Army

Defender of the Nation

15th March 2020 16:10:40 Hours

ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களுக்கு கௌரவ மரியாதைகள்

இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதன் நிமித்தம் இவருக்கு பனாகொடையிலுள்ள தலைமையகத்தில் இம் மாதம் (9) ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் படைத் தளபதியை தற்போதைய புதிய படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்கள் வரவேற்றார். பின்னர் படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் அமைந்துள்ள இராணுவ நினைவு தூபிக்கு சென்று நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி அஞ்சலிகளை செலுத்தினார்.

பின்னர் தலைமையகத்திலுள்ள சாஜன் விடுதியில் ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் படைத் தளபதிக்கு பிரியாவிடை நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அத்துடன் படைத் தளபதியவர்கள் தலைமையகத்திலுள்ள படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.

அத்துடன் அன்றிரவு இடம்பெற்ற இரவு விருந்தோம்பல் நிகழ்வுகளிற்கு வருகை தந்த படைத் தளபதியை இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஜயநாத் ஜயவீர அவர்கள் வரவேற்றார். இச்சந்தர்ப்பத்தில் இலேசாயுத காலாட் படையணியின் மத்திய கட்டளை தளபதி கேர்ணல் அநுர திசாநாயக அவர்களும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate link trace | Men's Footwear