09th March 2020 15:33:33 Hours
வாகரையில் அமைந்துள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தின் 29 ஆவது ஆண்டு நிறைவு விழாவானது பெப்ரவாரி மாதம் 25 ஆம் திகதி தலைமையக வளாகத்தினுள் சிறப்பாக இடம்பெற்றது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு இத்தலைமையகத்திலுள்ள 75 படை வீரர்கள் பொலன்னறுவை இரத்த வங்கியில் இரத்த தானங்களை வழங்கி வைத்தனர். பின்னர் தலைமையக வளாகத்தினுள் பௌத்த சமய அனுஷ்டான நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.
அத்துடன் 13 பௌத்த தேரர்களுக்கு ‘ஹீல் தானம்’ வழங்கி வைக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் 233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் ரஞ்ஜித எல்விடிகல மற்றும் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர். Sports Shoes | Nike