04th March 2020 15:23:30 Hours
14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையக படையினருக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அனர்த்த முகாமைத்தும் தொடர்பான பயிற்சி பட்டறையானது புதன் கிழமை 4 ஆம் திகதி கொழும்பு 2 இல் அமைந்துள்ள 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையக விரிவுரை மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ் விரிவுரையின்போது படையினருக்கு இயற்கை அனர்த்தங்கள், அனர்த்த நடவடிக்கைகள், படையினரின் விரைவான நடவடிக்கை மற்றும் ஏனைய திட்டங்கள் தொடர்பான பல விடயங்கள் தெளிவூட்டப்பட்டன.
இவ் விரிவுரையை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தை சேர்ந்த (நடவடிக்கை அறை) திரு எஸ்.ஹப்புஹாராச்சி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கான முப்படை ஒருங்கிணைப்பு அதிகாரியான இலங்கை கடற்படையைச் சேர்ந்த கொமாண்டர் ஆர்.எல் பாலசூரிய ஆகியோர் இணைந்து நடாத்தினர்.
அதிகாரிகள் உள்ளிட்ட 84 இராணுவ படையினர் இவ்விரிவுரையில் கலந்து கொண்டனர். மேலும் 14 ஆவது படைப் பிரிவு படைத் தளபதியின் மேற்பார்வையில் இவ்விரிவுரைக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. bridge media | Sneakers