Header

Sri Lanka Army

Defender of the Nation

03rd March 2020 15:00:43 Hours

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்தாட்ட போட்டிகள்

முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 68 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் சிவில் சமூகங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்தாட்ட போட்டிகளின் இறுதிச் சுற்றுப் போட்டியானது இம் மாதம் (1) ஆம் திகதி புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த செனெவிரத்ன அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்.

கால்பந்தாட்ட போட்டியானது 27 கழகங்களுக்கு இடையில் கடந்த பெப்ரவாரி மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி இறுதிச் சுற்றுப் போட்டியானது புனித ஜூட் கால்பந்தாட்ட கழகம் மற்றும் புனித அந்தோனியார் கால்பந்தாட்ட கழகங்களுக்கு இடையில் இடம்பெற்றது.

இதன் போது இந்த போட்டிகளில் புனித ஜூட் கால்பந்தாட்ட கழகத்தை தோற்கடித்து புனித அந்தோனியார் கழகத்தினர் வெற்றியை சுவீகரித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வினூடாக குருவில் மகா வித்தியாலய கால்பந்தாட்ட அணியினர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

கால்பந்தாட்ட போட்டி நிகழ்வில் மதகுரு தலைவர்கள், பிரதேச செயலக அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், வர்த்தக வியாபாரிகள் மற்றும் கால்பந்தாட்ட ரசிகர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த போட்டிகள் 68 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்னாயக அவர்களது வழிக்காட்டலின் கீழ் 682, 683 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டன. trace affiliate link | Nike for Men