Header

Sri Lanka Army

Defender of the Nation

28th February 2020 10:58:33 Hours

புதிய சமிக்ஞை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன அவர்கள் கடமைப் பொறுப்பேற்பு

புதிய சமிக்ஞை தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் அதீப திலகரத்ன அவர்கள் தனது கடமையை வியழக்கிழமை (27) ஶ்ரீ ஜயவர்த்தனபுரையில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

பொளத்த தேரரின் தலைமையில் இடம்பெற்ற ‘செத் பிரித்’ நிகழ்வுகளுக்கு மத்தியில் மேஜர் ஜெனரல் திலகரத்ன அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் அவர் அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் உரையாற்றியதுடன் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். இலங்கை சமிக்ஞை படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் பிரபாத் தெமடன்பிட்டிய, தகவல் தொழில் நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் பி.ஏ.ஜே.பீரிஸ், சமிக்ஞை பிரிகேட் தலைமையக தளபதி பிரிகேடியர் டபல்யு.எல். பிரேமசிறி, இலங்கை சமிக்ஞை படையணியின் மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் எல்.எஸ்.பி.பெரேரா, கட்டளை அதிகாரிகள், மற்றும் ஏனைய பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Authentic Nike Sneakers | Nike Dunk Low Disrupt Pale Ivory - Grailify