27th February 2020 16:45:28 Hours
ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தின் உளவியல் நடவடிக்கைப் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக, பிரகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்கள் இன்று காலை இப் பணிப்பக காரியாலயத்தில் (27) தமது கடமைப் பொறுப்பேற்றார்.
அந்த வகையில் இப் பணிப்பக புதிய பணிப்பாளர் அவர்கள் பல உயர் அதிகாரிகளின் முன்னிலையில் தமது உத்தியோகபூர்வ கையொப்பத்தையிட்டு தமது கடமைப்பொறுப்பேற்றார். மேலும் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்கள் இப் பதவி வகிப்பிற்கு முன்னர் பனாகொடை பீரங்கிப் படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக சேவையாற்றியுள்ளார்.
மேலும் இப் பணிப்பகத்தின் முன்னைய பணிப்பாளரான மேஜர் ஜெனரல் விமுக் லியனகே அவர்கள் வன்னி பிரதேச பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 21ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதியாக தற்போது சேவையாற்றுகின்றார். Running Sneakers Store | Sneakers Nike Shoes