27th February 2020 17:03:28 Hours
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில், ஏழு தடவைகள் காயங்களுக்கு உட்பட்ட 11 ஆவது கெமுனு ஹேவா படையணியைச் சேர்ந்த கோப்ரல்(ஓய்வு) கே.கே.எஸ்.ஆர்.டபல்யு.பி ரத்நாயக்க அவர்களுக்கு கண்டி மாவட்டத்தில் உள்ள திகன பிரதேசத்தில் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இவ்வீடானது 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஆரியசிங்க மற்றும் இராணுவ தங்குமிட வசதிகள் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ ஆகியோரின் முயற்சியினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கையின் போது முழுமையாக தன்னை அர்பணித்து ஏழு தடவைகள் காயங்களுக்கு உட்பட்ட குறித்த இராணுவ வீரர் தற்பொழுது மருத்துவ ஆலோசனையின் பிரகாரம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார்.
அடிப்படை வசதிகளில் ஒன்றான தங்குமிட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்ட குறித்த இராணுவ வீரரின் சூழ்நிலையானது, அப்பொழுது 11வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரியாக சேவையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ அவர்களின் கவனத்திற்கு, சில மாதங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டன.
அதன் பிரகாரம், யுத்தகாலத்தில் வெலிஓயாவில் பாதுகாப்பு பிரிகேட் படைத் தளபதியாக இருந்த தற்போதைய 14 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் அருண ஆரியசிங்க அவர்களின் முயற்சியில், நுகேகொட செவண ஹோல்டிங்ஸ் வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் தலைவர் திரு சுரஜ் சஞ்ஜீவ டி சில்வா அவர்களினால் இப்புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியுதவியானது வழங்கப்பட்டது.
இவ்வீட்டினை நிர்மாணிபதற்கு கெமுனு ஹேவா படையணியின் படையினர் மற்றும் அதன் பொறியியலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். கண்டி, திகனவில் நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வீடானது ஓய்வுபெற்ற படை வீரர்,அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் ஆகியோரின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் அருண ஆரியசிங்க மற்றும் திரு சுரஜ் சஞ்ஜீவ டி சில்வா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொன்டதுடன் இராணுவ தங்குமிட வசதிகள் பணிப்பாளர் பிரிகேடியர் பிரியங்க பெணான்டோ, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் குறித்த வீட்டை நிர்மாணித்த படையினர்களும் கலந்து கொண்டனர். latest jordans | Sneakers