26th February 2020 10:01:48 Hours
65 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் இரனமதநகர் செபமாலை தேவாலய வாளகத்தினுள் மரநடுகைகள் இம் மாதம் (23) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
651 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதியின் தலைமையில் 40 சிவிலியன்களது பங்களிப்புடன் இந்த மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் கல்விளான் அருவி முன்பள்ளியில் இலங்கை இலேசாயுத காலாட் படையணி மற்றும் 9 சிவிலியன்களது பங்களிப்புடன் இம் மாதம் (24) ஆம் திகதி இந்த சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
661 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் எச்.எச்.கே.எஸ்.எஸ் ஹேவகே அவர்களது வழிக்காட்டலின் கீழ் பூனகிரி செல்லபுரம் முன்பள்ளி வளாகத்தில் 24 ஆவது விஜயபாகு காலாட் படையணி மற்றும் 5 (தொ) பொறிமுறை காலாட் படையணியினர் ஆசிரியர்களது வேண்டுகோளை முன்னிட்டு இந்த சிரமதான பணிகளை இம் மாதம் (23) ஆம் திகதி மேற்கொண்டனர்.
இந்த பணிகள் 66 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் எம்.டி விஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.Buy Sneakers | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp