22nd February 2020 21:47:20 Hours
14ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் படைப் பிரிவுகளின் படையினர்களுக்கான மதுபோதை தடுப்பு தொடர்பான கருத்தரங்கானது களனிமுல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள 2 ஆவது (தொண்டர்) இலங்கை இலேசாயுத காலாட் படையணித் தலைமையகத்தில் 14 ஆவது படைத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் வெள்ளிக் கிழமை (21) ஆம் திகதி இடம்பெற்றது..
இக் கருத்தரங்கில் 15 அதிகாரிகள் மற்றும் 152 படையினர்கள் கலந்து கொண்டதுடன் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகரான மஞ்சுல செனரத், பொலிஸ் அத்தியட்சகர்கரான நிஷாந்த சில்வா மற்றும் ஜகத் ரோகன அத்துடன் பொலிஸ் பரிசோதகரான கே பிரேமரத்ன போன்றோரால் இக் கருத்தரங்கு மேற்கொள்ளப்பட்டது.
இவ் விழிப்புணர்வின் மூலம் படையினர் எவ்வாறு தம்மை மதுபோதையிலிருந்து பாதுகாத்து கொள்ளல் தொடர்பான விளக்கங்கள் பரிந்துரைக்கப்பட்டன.. best Running shoes | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers