24th February 2020 11:48:01 Hours
233 ஆவது படைத் தலைமையகத்தின் 29 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ரிதிகம ஞானேஸ்வர தேரரின் அனுசரனையுடன் கதிரவெலி டிக்கான கிராமத்தில் உள்ள பொது மக்களது தேவைகளது நிமித்தம் 5000 லீற்றர் குடிநீர் தாங்கிகள் 1.3 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்டு மக்களின் பாவனைகளுக்கான இம் மாதம் (21) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
இந்த குடிநீர் தாங்கி 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர அவர்களினால் திறந்து வைக்கப்பட்டன. அத்துடன் 233 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களின் தலைமையில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 35 குடும்ப அங்கத்தவர்களுக்கு 7000 பெறுமதிமிக்க உலருணவு பொதிகள், பாடசாலை உபகரணங்கள் உள்ளடக்கப்பட்ட பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரஷிக பெர்ணாண்டோ அவர்களது ஆசிர்வாதத்துடன் இந்த பணிகள் 233 ஆவது படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிகழ்வில் விதுலுபுர சாஷன பிரதீபராம விகாரையின் தேரர், ரிதிகம ஞானேஸ்வர தேரர், 23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர, 233 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி, அதிகாரிகள், படை வீரர்கள் மற்றும் சிவிலியன்கள் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும் Sportswear free shipping | Autres