13th February 2020 14:30:51 Hours
72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிமேதகு ஜனாதிபதியவர்களால் முப்படையினருக்காக வழங்கப்பட்ட பொது மன்னிப்பு கால அவகாசத்தில் (பெப்ரவரி 5ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி புதன் கிழமை மாலை வரையான காலப்பகுதியில்), சட்டபூர்வமற்ற முறையில் இராணுவத்திலிருந்து இடை விலகிய 7 அதிகாரிகள் மற்றும் 6091 படையினர் தங்களது படைத் தலைமையகங்களுக்கு சென்று சரணடைந்தனர்.
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள அனைத்து படைத் தலைமையகங்களிலும் இதற்கு தேவையான சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
மேற்குறிப்பிட்ட காலத்தில் கடற் படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த படையினர்களும் தங்களுடைய படைப் பிரிவுகளுக்கு சென்று சரணடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers Store | Women's Nike Air Max 270 React trainers - Latest Releases , youth boys nike sunray sandals clearance outlet