10th February 2020 15:08:20 Hours
பொறிமுறை காலாட் படையணியின் புதிய படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் ஏ.ஜி.டி.என் ஜயசுந்தர அவர்கள் தனது கடமையை வெள்ளிக் கிழமை 7 ஆம் திகதி பொறிமுறை காலாட் படையணியில் வைத்து பொறுப்பேற்றுக் கொண்டார்.
அங்கு வருகை தந்த புதிய படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதைகள் வழங்கப்பட்டன.
பொறிமுறை காலாட் படைத் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் எல்.எஸ் பாலச்சந்திர ,பொறிமுறை காலாட் படையணியின் மத்திய கட்டளைத் தளபதி பிரிகேடியர் எஸ்.ஜே பிரியதர்சன, 11ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் திட்ட அதிகாரி பிரிகேடியர் எச்.எம்.எஸ் ஹேரத் மற்றும் பிரதி மத்திய கட்டளைத் தளபதி கேணல் கே.கே.எஸ் பெராகும் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதிய பொறிமுறை காலாட் படையணியின் படைத் தளபதியவர்கள், நாட்டிற்காக தங்களது உயிர்களை நீத்த படை வீரர்களின் நினைவுத்தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர் அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாஹா சங்கத்தினரின் ஆசிர்வாதத்திற்கு மத்தியில் அவர் தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
அன்மையில் இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து அவர்களுக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். affiliate tracking url | Air Jordan 1 Retro High OG University Blue - Gov