Header

Sri Lanka Army

Defender of the Nation

08th February 2020 14:49:49 Hours

இராணுவத்தினரது உதவியுடன் யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

தேசிய சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 411 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் இம் மாதம் (2) ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களின் தலைமையில் 100 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த துவிச்சக்கர வண்டிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் அமெரிக்க ‘மாஸ்ட் இன்டஸ்ட்ரீட் பார் ஈஸ்ட் லிமிட்டட் மற்றும் கொழும்பிலுள்ள ‘மாஸ்ட் இன்டஸ்ட்ரீட் பார் ஈஸ்ட் லிமிட்டட் கிளையின் அனுசரனையில் இந்த துவிச்சக்கர வண்டிகள் மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

யாழ் ட்ரிமர் மண்டபத்தில் 51 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் ஒழங்கு செய்யப்பட்ட நிகழ்வில் 51 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்னாயக அவர்கள் பிரதம அதிதியா வருகை தந்து வறிய குடும்பத்தைச் சேர்ந்த 145 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பிரதேச செயலகத்தில் இம் மாதம் (2) ஆம் திகதி 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே மற்றும் 55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொடுவேஹொட அவர்களது தலைமையில் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 166 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணிபுரியும் இராணுவ உயரதிகாரிகள், கிராம சேவக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், யாழ் சர்வோதய அதிகாரிகள் மற்றும் படையினர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sport media | Nike nike dunk high supreme polka dot background , Gov