29th January 2020 08:00:22 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிரி அவர்கள் (29) ஆம் திகதி புதன்கிழமை அனுராதபுரத்தில் அமைந்துள்ள ‘அபிமங்சள 3’ க்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட அவர் 2020 புதிய ஆண்டில் அவர்களின் நல்வாழ்வு மற்றும் தேவைகள் தொடர்பாக நலன் விசாரித்தார்.
இங்கு வருகை தந்த வன்னி படைத் தளபதியை அவயங்களை இழந்த போர் வீரர்கள் சக்கர நாற்காலியில் இருந்து அபிமங்சல 1 இன் கட்டளை தளபதியான எச்.பி.ஹெட்டியராச்சியுடன் வரவேற்றதை தொடர்ந்து அவயங்களை இழந்த 28 போர் வீரர்களின் புனர்வாழ்வு மற்றும் மீள்ளுருவாக்கம் தங்குமிடங்களை பார்வையிட்டார்
பிரதம அதிதியாக கலந்துகொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தளபதி அவர்கள் அனைத்து போர் வீரர்களுக்கும் பரிசுப் பொதிகளை வழங்கி அவர்களுடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். வருகையின் முடிவில், ‘அபிமன்சலா 1’ இன் அன்றைய பார்வையாளர் மற்றும் அங்கத்தவர்களுடன் சுருக்கமாக உரையாடினார், அதைத் தொடர்ந்து தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டு பார்வையாளர்களின் புத்தகத்தில் பாராட்டு கருத்துக்களை கையொப்பமிட்டார்.
இந்த நிகழ்வில் 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமார் ஜயபத்திரன உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். Sportswear free shipping | adidas garwen spezial white shoes - New In Shoes for Men