27th January 2020 10:00:59 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித்த தர்மசிறி அவர்கள் கல்குளத்தில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியனிக்கு தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இப் படையணிக்கு வருகை தந்த வன்னி படைத் தளபதி 3 ஆவது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியனியின் கட்டளை அதிகாரி எம்.எம்.எம்.பி மஹேஷ் குமார அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து படையணியின் பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கம் கொடுக்கப்பட்டன. பின்னர் இவரின் வருகையின் நினைவாக படையணி வளாகத்தில் மரகன்றும் நடப்பட்டது.
அதேவளை வினியோக கட்டளை மற்றும் இராணுவ பொலிஸ் படையணியணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.ஜீ.டி சிரிசேன அவர்கள் இம் மாதம் (26)ஆம் திகதி சேவையில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு கல்குளத்தில் அமைந்துள்ள 3 ஆவது இராணுவ பொலிஸ் படையணியணிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
விஜயத்தினை மேற்கொண்ட அவருக்கு சிரேஷ்ட அதிகாரியினால் இராணுவ மரியாதையளிக்கப்பட்டது. பின்னர் இவரின் வருகையின் நினைவாக படையணி வளாகத்தில் மரகன்றும் நடப்பட்டது. பின்னர் அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் உரையாற்றிய அவர் தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டார். Running sport media | Yeezy Boost 350 Trainers