27th January 2020 16:51:22 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெனாண்டோ அவர்கள் இராணுவத்தின் பதில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு பதிலாக தம்பானயில் அமைந்துள்ள “தாகோப” பாகொட குருகும்புரு ஆதிவாசி ஜனவுரும விகாரையின் இம் மாதம் (25) ஆம் திகதி சனிக்கிழமை புதிய கட்டிட நிர்மாண பணிகளுக்கான அடிகல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்விற்கு குருகும்புர ஆதிவாசி ஜனவுரும விகாரையின் மத குரு கல்பொருயாய பிரதீபவன்ச அவர்கள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு பிரதம அதிதியாக கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அதற்கமைய இராணுவத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ரசிக்க பெனாண்டோ அவர்கள் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் அஸ்கிரிய சியம் நிகயவின் தேரரான வரகாகொட ஞானரத்ன மகா நாயக்க தேரர், நெல்லிகல சர்வதேச பௌத்த நிலையத்தின் வத்துரகும்புரே தம்மரத்ன நாயக்க தேரர், கம்பஹா பவுன்பெல்ஸா சர்வதேச பௌத்த நிலையத்தின் வல்பொல கௌதம தேரர்கள் உட்பட ஆதிவாசி சமூகத்தின் தலைவரான உருவாரிகே வன்னியால அத்தோ, மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பௌத்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். Sports brands | 【国内4月24日発売予定】ナイキ ウィメンズ エア アクア リフト 全2色 - スニーカーウォーズ