07th January 2020 22:03:50 Hours
உளநலப் நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் சிறந்த இராணுவ வாழ்க்கை எனும் தலைப்பிலான இரண்டு நாள் விரிவுரைகள் 24 ஆவது படைப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் படையினர்களுக்கு அம்பாறையில் உள்ள காம்பாட் பயிற்சிப் பாடசாலையில் ஜனவரி 7-8 ஆம் திகதிகளில் நடைபெற்றன.
இந்த விருவுரையில் தற்கொலைகள் மன உளைச்சல் போன்றவற்றிலிருந்து மகிழ்ச்சியான வாழ்க்கையினை மீட்டல் தொடர்பாக பல கருத்துக்கள் விருவுரைக்கப்பட்டன.
இக் கருத்தரங்கானது உளநலப் நடவடிக்கைப் பணிப்பகத்தின் லெப்டினன் கேர்ணல் பி.ஆர்.பி.ஏ பண்டார, மேஜர் யூபி மல்லவாராச்சி, லெப்டினன்ட் எஸ் வி ஆர் ஏ டி சில்வா, லெப்டினன் எச்.ஜீ.என் தேசபிரிய மற்றும் லெப்டினன் ஜே.டி.யூ.சி ஜயகொடி ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்பாறையில் இடம்பெற்ற இரண்டு நாள் விரிவுரையில் 24 ஆவது படைப் பிரிவு மற்றும் அம்பாறையில் உள்ள காம்பாட் பயிற்சிப் பாடசாலையின் 24 அதிகாரிகள் உட்பட 514 படையினர்கள் கலந்து கொண்டனர். affiliate link trace | 【発売情報】 近日発売予定のナイキストア オンライン リストックまとめ - スニーカーウォーズ