23rd December 2019 16:02:29 Hours
மாதுறு ஓயாவில் நடைபெற்ற விசேட காலாட் படை நடவடிக்கை பாடநெறியினை -69 வெற்றிகரமாக பூர்த்தி செய்த 11 அதிகாரிகள் மற்றும் 204 படை வீரர்களின் வெளியேற்ற நிகழ்வானது சனிக் கிழமை 21ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இராணுவ பயிற்சி கல்லூரியின் தளபதி பிரகேடியர் ஜகத் கொடிதுவக்கு அவர்கள் கலந்து கொண்டார்.
பாடநெறியின் சிறந்த அதிகாரியாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த கெப்டன் எம்.மீகஸ்தென்ன அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் பாடநெறியின் சிறந்த சூட்டாளராக கஜபா படையணியைச் சேர்ந்த கேபிகேகே ஆனந்த அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் .பாடநெறியின் சிறந்த படை வீரராக சிங்க படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் யுஎல்டிஎம் விஜேந்திர அவர்கள் தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Best Authentic Sneakers | Nike Shoes