22nd December 2019 11:44:38 Hours
இலங்கை இராணுவ அக்கடமியில் பயிற்சிகளை நிறைவு செய்து வெளியேறுகின்ற அதிகாரிகளது வெளியேற்ற நிகழ்வானது சனிக் கிழமை (21) தியத்தலாவையில் மாலை வேளை இடம் பெறவுள்ளதுடன் இவர்கள் மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான விபரக் கோவையானது இவ் அக்கடமி அரங்கில் இடம் பெற்றது. இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களும் கலந்து கொண்டார்.
அந்த வகையில் இலங்கை இராணுவ அக்கடமியில்; பயிற்சிகளை நிறைவு செய்த 321 கெடெட் அதிகாரிகளின் வெளியேற்ற விழா இன்று காலை (21) இடம் பெற்றது.
மேலும் இவர்கள் மேற்கொண்ட பயிற்சிகள் தொடர்பான விபரக் கோவையானது இவ் இராணுவ அக்கடமியில் காண்பிக்கப்படுவது வழக்கமான நிகழ்வாக காணப்படுகின்ற ஓர் விடயமாகும்.
இந் நிகழ்வில் இராணுவ சேவா வணிதா பிரிவின் திருமதி சுஜீவா நெல்சன் பதவிநிலைப் பிரதானியான மேஜர் ஜெனரல் சத்தியப்பிரிய லியனகே பிரதி பதவிநிலைப் பிரதானியான
மேஜர் ஜெனரல் நிர்மல் தர்மரத்தின மற்றும் பல உயர் அதிகாரிகள் படையினர் போன்றோர் கலந்து கொண்டனர். Best Nike Sneakers | Nike Shoes