10th December 2019 15:19:40 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ சேவை புரியும் இராணுவத்தினருக்கு மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு இம் மாதம் (9) ஆம் திகதி நெலும்பியஷ கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த செயலமர்வில் விரிவுரைகள் 5 ஆவது இராணுவ பொலிஸ் படையணியைச் சேர்ந்த மேஜர் N.P.E.N நேரன்கம அவர்களினால் மேற்கொள்ளப்பட்டன.
செயலமர்வில் 22 அதிகாரிகள் மற்றும் 698 படையினர்கள் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Nike