15th December 2019 23:32:33 Hours
"உலகின் எந்த நாடானதும் தனது ஆயுதப்படைகளை அவமானப்படுத்தாது. முன்னைய அரசாங்கமானது எங்கள் இராணுவ புலனாய்வு துறைகளை செயலிழக்கச் செய்து ஐக்கிய நாட்டு நீதிபதிகளை நியமிக்கும் முன் இணை அனுசரணையுடன் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இதன்மூலம், அவர்கள் எங்கள் ஆயுதப்படைகளின் கண்ணியத்தையும் மரியாதையையும் இழிவுபடுத்தினர். 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் நாங்கள் அனைவரையும் சரிசெய்து நிலைமைக்கு திரும்புவோம் என்று நான் உங்களுக்கு கடந்த காலங்களில் உறுதியளித்தேன். அதன் பிரகாரம் நான் திரு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அவர்களை 2005 ம் ஆண்டு நான் பாதுகாப்பு செயலாளராக நியமிக்க முடிவெடுத்தேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தற்போதைய ஜனாதிபதியை பாதுகாப்பு செயலாளராக நியமித்த பின்னர் உலகின் கொடிய பயங்கரவாதத்தை தோற்கடித்து மிகப்பெரிய சாதனையை நாங்கள் நிலை நாட்டியுள்ளோம். நம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை அச்சுறுத்தலுக்கு உள்ளன அந்த நேரம். பயங்கரவாதத்தை வென்ற 10 வது ஆண்டு நிறைவை நினைவுகூரவிருந்தபோது, எமது நாட்டில் மீண்டும் ஏப்ரல் மாத தாக்குதல் இடம்பெற்றது கவலைக்குரிய விடயமாகும். ”என்று கௌரவத்திற்குரிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கொழும்பு தாமரை தடாகத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் மற்றும் பதவிநிலை கல்லூரியின் பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த போது ஆற்றிய உரையின் போது இந்த கருத்துக்களை வலியுறுத்தினார். (கீழே வீடியோ கண்காட்சிகள் முன்வைக்கப்பட்டுள்ளன)Sportswear Design | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov