05th December 2019 14:33:51 Hours
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் மேற்பார்வையின் கீழ், 57ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையத்தின் ஒருங்கிணைப்பின் மூலம் இராணுவத்தினரால் கிளிநொச்சியில் உள்ள பின்தங்கிய பிரதேச மக்களுக்கான உதவிகள் வெள்ளிக் கிழமை 28ஆம் திகதி வழங்கப்பட்டன.
கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின்பிரகாரம் ‘டஹாம் பஹன’ நிறுவனத்தினால் இதற்கான அனுசரணை வழங்கப்பட்டது.மேலும் இந் நிகழ்வில் 20 குடும்பங்களுக்கான சூரிய மின் சக்தி உபகரணங்கள் மற்றும் 100 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
கத்தோலிக மதபோதகர்கள், 57ஆவது பாதுகாப்பு படைப் பிரிவுத் தலைமையத்தின் தளபதி , பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் , படை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். Buy Kicks | Women's Sneakers