18th April 2018 18:05:52 Hours
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் அமைந்திருக்கும் 12 ஆவது படைப் பிரிவினரால் ஒழுங்கமைக்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுக்கான சிங்கள் மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வு (13) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இப் படைப் பரிவு வளாகத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் 12 ஆவது படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் நிசாந்த வன்னியாராச்சி அவர்களின் தலைமையில் இந் நிகழ்வு ஓழுங்கமைக்கப்பட்டதோடு அவர்களால் உத்தியோகபுர்வமாக தேசிய கொடியேற்றி நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இப் புத்தாண்டு நிகழ்வில் சந்தோசத்தை கொண்டாடும் நோக்குடன் இராணுவ படையினர்களின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இந் நிகழ்வில் மெதுவான சைக்கில் ஓட்டம் யாணைக்கு கண் வைத்தல் வலுக்கு மரம் ஏறுதல், கொட்டா போரய, கயறு இழுத்தல், விநோத உடைப் போட்டிகள், பெலுன் ஊதுதல், போன்ற சம்பிரதாய வினோத விளையாட்டு போட்டிகளும் இடம் பெற்றது.
இந்த புத்தாண்டு நிகழ்வு போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி அனைவருக்கும் 12 ஆவது படைப் பிரிவின் கட்டளை மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் பெறுமதியான பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த புத்தாண்டு நிகழ்வு இறுதியில் படையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மதிய உணவும் வழங்கப்பட்டது.
அதேபோல் மாலைநேரத்தில் 9ஆவது சிங்க படையினர்களின் இசைக் குழுவினர்களால் வண்ணமயமான இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
bridge media | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE